இலங்கையின் சுதந்திரதின நிகழ்வில் கலந்து கொள்ள வரும் நேபாள வெளிவிவகார அமைச்சர்!

இலங்கையின் 75வது சுதந்திர தின விழாவில் கலந்து கொள்வதற்காக நேபாள வெளிவிவகார அமைச்சர் கலாநிதி பிமலா ராய் பௌத்யால் (Bimala Rai Paudyal) வியாழக்கிழமை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட விழாவில் அமைச்சர் பிமலா ராய் பௌத்யால் விருந்தினராக கலந்து கொள்வார் என நேபாள வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளார்.